‘புள்ள’ பாடல் வரிகள் | Pulla Song Lyrics Tamil
தமிழ் வரிகள்:
ஆண்: உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல…
ஆண்: உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல…
ஆண்: வார்த்தை இல்ல தீந்தாச்சு
கண்ணீர் கூட காஞ்சாச்சு
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல…
ஆண்: கொஞ்சும் பார்வ என்னாச்சு
மண்ணு குள்ள மண்ணாச்சு
தீராத பாரம் பெண்ணே உள்ள
ஏறாத போதை தந்த மெல்ல…
ஆண்: ஹே.. நெஞ்சம் எல்லாம் தீயாச்சு
தூறல் நின்னு போயாச்சு
ஹே……பார்த்து பார்த்து நான் கண்ட
காட்சி எல்லாம் வீணாச்சு…
ஆண்: வாடி வாடி காதல் பெண்ணே
கண்கள் பார்த்து நாளாச்சு
தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி
விட்ட மூச்சு சூடாச்சு…
ஆண்: காதல் என்னும் நோயாச்சு
தேனும் கல்லும் ஒன்னாச்சு
நானும் நீயும் வேறாச்சு
வாழ்க்கை மாறி போயாச்சு…
ஆண்: எங்கேதான் போவேன் சொல்லு புள்ள
வானத்தில் நிலா இல்ல இல்ல
எங்க போனா அம்மடி
எட்டு திக்கும் நீ தான்டி
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல….
பாடல் விவரம்:
திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: G.V. பிரகாஷ் குமார்
பாடலாசியர்: தனுஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…