‘புள்ள’ பாடல் வரிகள் | Pulla Song Lyrics Tamil – Nilavuku En Mel Ennadi Kobam

Pulla Song Lyrics Tamil
Pulla Song Lyrics Tamil

‘புள்ள’ பாடல் வரிகள் | Pulla Song Lyrics Tamil

தமிழ் வரிகள்:

ஆண்: உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல…

ஆண்: உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல…

ஆண்: வார்த்தை இல்ல தீந்தாச்சு
கண்ணீர் கூட காஞ்சாச்சு
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல…

ஆண்: கொஞ்சும் பார்வ என்னாச்சு
மண்ணு குள்ள மண்ணாச்சு
தீராத பாரம் பெண்ணே உள்ள
ஏறாத போதை தந்த மெல்ல…

ஆண்: ஹே.. நெஞ்சம் எல்லாம் தீயாச்சு
தூறல் நின்னு போயாச்சு
ஹே……பார்த்து பார்த்து நான் கண்ட
காட்சி எல்லாம் வீணாச்சு…

ஆண்: வாடி வாடி காதல் பெண்ணே
கண்கள் பார்த்து நாளாச்சு
தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி
விட்ட மூச்சு சூடாச்சு…

ஆண்: காதல் என்னும் நோயாச்சு
தேனும் கல்லும் ஒன்னாச்சு
நானும் நீயும் வேறாச்சு
வாழ்க்கை மாறி போயாச்சு…

ஆண்: எங்கேதான் போவேன் சொல்லு புள்ள
வானத்தில் நிலா இல்ல இல்ல
எங்க போனா அம்மடி
எட்டு திக்கும் நீ தான்டி
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல….

பாடல் விவரம்:

திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: G.V. பிரகாஷ் குமார்

பாடலாசியர்: தனுஷ்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…