மருத்துவமனையில் இருந்து அஜித் குமார் டிஸ்சார்ஜ்:
நடிகர் அஜித் குமாருக்கு கலையுலக சேவையைப் பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சூழலில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ஒவ்வொரு முறை கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கு முன்பும் உடல் பரிசோதனை செய்து கொள்வது அஜித்தின் வழக்கம் எனவும் அந்த மாதிரியான ஒன்றுதான் இது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…