‘கானா கானா’ பாடல் வரிகள் | Gaana Gaana Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்
விக்ர விக்ர விக்ர விக்ர விக்ரமாதித்தன் நானம்மா
வண்டி ஓட்டிப் போகணும்டா தூரமா
என் வயிறு இங்கே பசிக்குதடா கோரமா
சீக்கிரம் ஏதாச்சும் கொண்டா சூடா காரமா…
குழு: சூடா காரமா சூடா காரமா
ஹையோ பாவமா மாட்டிக்கிச்சி ஆடுமா
வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கெதுக்கு ராசா
கூண்டுக்குள்ள காலெடுத்து வெக்குறியே லூசா
இப்பக் கூட ஒண்ணும் இல்ல ஓடிப் போயிடு
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பராயிடு…
ஆண்: சூடா வந்தது சூப்பர் மாமா
காரமா கேட்டேனே காரமா காரமா…
பெண்: ம்.ம்.ம்.ம்….
பெண்: கானா கானா தெலுங்கானா
அட காரம் கெளப்பும் மொளகா நான்
கானா கானா தெலுங்கானா
இங்க யாரும் மயங்கும் அழகா நான்…
பெண்: கண்ணால பாத்தாலே வாயெல்லாம்
குழு : நீரூறும்…
பெண்: வாயோட வெச்சாலே கண்ணெல்லாம்
குழு : நீரூறும்…
பெண்: பசங்க எல்லாருமே
குழு: ஃபீஸு போன தோப்பு…
பெண்: பொண்ணுங்க மென்னு துப்பும்…
குழு: வெத்தல பாக்கு
பெண்: அடடா செவந்துருச்சு நாக்கு…
ஆண்: கானா கானா தெலுங்கானா
இவன் உங்கள அடக்கிட வந்தானா
குழு: கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…
ஆண்: பூட்டி மறைக்கிறது உங்க பொழுதுபோக்கு
தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு
அடடா ஒடஞ்சுடுச்சே லாக்கு…
குழு: கானா கானா தெலுங்கானா
இவன் தீயில் உருகும் மெழுகானான்
கானா கானா தெலுங்கானா
இவன் அழுவும் போதும் அழகானான்..
பெண்: எங்கிருந்து வந்தானோ எதுக்காக வந்தானோ
திருகாணி எடுக்குறான் மறையாணி முடுக்குறான்
பல் சக்கரம் மாட்டி விட்டு குதிரைய ஓட்டுறான்
தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குனான்…
பெண்: கானா கானா தெலுங்கானா
இவன் ஜெயிச்சிடப் பொறந்த சுல்தானா
கானா கானா தெலுங்கானா
என்ன மயக்கிட வந்த மஸ்தானா…
பெண்: ஆள தெரியாம அட்ரஸு கேட்டுட்டேன்
ஆட முடியாம ஐயா நான் தோத்துட்டேன்
தண்ணி காட்டுறது என் பொழுதுபோக்கு
என்ன சாச்சுப்புட்ட காலர நீ தூக்கு
நீ தான் டௌனுக்குள்ள டாக்கு…
குழு: கானா கானா தெலுங்கானா
அந்த ஐகளின் ஐ அது இவன் தானா
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…
பாடல் விவரம்:
திரைப்படம்: 10 எண்றதுக்குள்ள
இசை: D.இமான்
பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன் & ஸ்ரேயா கோஷல்
பாடலாசியர்: மதன் கார்க்கி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…