‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் வரிகள் | Chinnanjiru Nilave Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல்யானே…
ஆண்: யாங்குனைத் தேடுவலும் அன்னமே ஏதினி செய்குவனோ
ஓங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி…
ஆண்: துள்ளும் நயனமெங்கே
வெள்ளம்போல் சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே
என்னை சேர் ஆரண மார்புமெங்கே…
ஆண்: மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தீண்டிடும் பார்வையெங்கே…
ஆண்: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
ஆண்: கானகம் எரியுதடி
வஞ்சியே ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி
அழகே பூமியும் சரிந்ததடி…
ஆண்: கொல்லை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை சாபமாய் தந்தனையோ…
ஆண்: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
ஆண்: அர்த்தம் அழிந்ததடி
அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி
சகியே யாதினி கோல்யானே…
பாடல் விவரம்:
திரைப்படம்: பொன்னியின் செல்வன் 2
இசை: A. R. ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிசரண்
பாடலாசியர்: இளங்கோ கிருஷ்ணன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…