இந்தியா மீது இவ்வளவு காழ்ப்பு, வெறுப்பு எதுக்கு? – பா.சிதம்பரம்
புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பாரத நாடு பழம்பெரும் நாடு என்று சுப்பிரமணிய தமிழ்நாடு பாரதியார் பாடியுள்ளார், பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல. அரசியல் சாசனத்தில் இந்தியாவும் இருக்கிறது பாரத்தும் இருக்கிறது. ஆனால் இந்தியா மீது இவ்வளவு காழ்ப்பு, வெறுப்பு திடீரென்று வந்ததுதான் வியப்பாக இருக்கிறது. எதிர்க்கட்சி கூட்டணிக்கு “இந்தியா” என்று அதன் பெயரை சுருக்கி எழுதுவதால் இந்தியா மீது கோபம் வந்துவிட்டது . நாளைக்கே “பாரத்” என்று எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் வைத்தால் பாரதம் என்ற பெயரையும் மோடி மாற்றி விடுவாரா?” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண