நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உடல் நலம் சீரானதால் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…