‘வானே வானே’ பாடல் வரிகள்| Vaane Vaane Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்…
ஆண்: நாள்தோறுமே…
ஆண்: கண்ணே கண்ணே காணா ஒன்றாய்
வந்தாய் நீயே மண் மீதிலே
முன்னே முன்னே தோன்றா முத்தாய்
ஏனோ சேர்ந்தாய் என் கையிலே…
ஆண்: பொன் மூங்கிலே உன் பேச்சிலே
கேட்காதோ ஏழிசையே
பூங்காற்றிலே உன் வாசனை
காட்டாதோ காதலையே
தேனூறும் சிறு பார்வை
மீட்டாதோ எனையே…
ஆண்: ஓடை துள்ளல் நீயானால்
உன் ஓசை நானல்லோ
ஒரு மின்னல் நான் ஆனால்
என் மேகம் நீயல்லோ…
ஆண்: மாலை திங்கள் நீயானால்
உன் கோலம் நானல்லோ
கார்காலம் வந்தாலே
என் கூதல் நீயல்லோ…
ஆண்: பூமரம் சிந்தா நிழலையும் நீயே
காட்டிட வந்தாய் புறவினிலே
ஞானபகமே மோத மூலும்
நாடகமே போதும்…
ஆண்: இடைவெளி ஏதும் இல்லா
நினைவுகள் தாலாட்ட
வருகிறதே பாராட்ட
தேங்காமல்… நீங்காமல்…
ஆண்: காணும் காட்சி எல்லாம்
உன்னை மேலும் பேசாதோ
கானல் நீர் படமே
தீட்ட தாகம் கூடாதோ…
ஆண்: வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்….
பாடல் விவரம்:
திரைப்படம்: அமரன்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: பைசல் ரஸி
பாடலாசியர்: யுகபாரதி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…