‘உருகுது உருகுது’ பாடல் வரிகள் | Urugudhu Urugudhu Song Lyrics in Tamil – Ace

Urugudhu Urugudhu Song Lyrics in Tamil
Urugudhu Urugudhu Song Lyrics in Tamil

‘உருகுது உருகுது’ பாடல் வரிகள் | Urugudhu Urugudhu Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருளில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்…

பெண்: மருகுது மருகுது
மடமனம் மருகுது
ஏனோ என் வரையில்
கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்…

ஆண்: அலாதி சுகம்
பெண்: அது என்ன ரகம்
ஆண்: அதாக வரும்
பெண்: அது என்னை சுடும்

ஆண்: வரும் நாட்கள் மனப் பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்…

குழு: யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்…

ஆண்: நிறைய பேச நினைக்குறேன்
குறைய பேசி முடிக்குறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்…

பெண்: உனது பேச்சை ரசிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண்: விழியின் வீச்சை தெளிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண்: விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்…

ஆண்: நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன்…

பெண்: இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்கா நான்
உனை பார்த்த பின்புதானே தளர்வானேன்
சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்…

குழு: யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்…

ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்…

ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள்…

பெண்: நீரில்…

பாடல் விவரம்:

திரைப்படம்: Ace

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

பாடியவர்கள்: கபில் கபிலன் மற்றும் ஸ்ரேயா கோஷல்

பாடலாசியர்: தாமரை.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…