‘உருகுது உருகுது’ பாடல் வரிகள் | Urugudhu Urugudhu Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருளில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்…
பெண்: மருகுது மருகுது
மடமனம் மருகுது
ஏனோ என் வரையில்
கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்…
ஆண்: அலாதி சுகம்
பெண்: அது என்ன ரகம்
ஆண்: அதாக வரும்
பெண்: அது என்னை சுடும்
ஆண்: வரும் நாட்கள் மனப் பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்…
குழு: யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்…
ஆண்: நிறைய பேச நினைக்குறேன்
குறைய பேசி முடிக்குறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்…
பெண்: உனது பேச்சை ரசிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண்: விழியின் வீச்சை தெளிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண்: விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்…
ஆண்: நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன்…
பெண்: இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்கா நான்
உனை பார்த்த பின்புதானே தளர்வானேன்
சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்…
குழு: யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்…
ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்…
ஆண்: உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள்…
பெண்: நீரில்…
பாடல் விவரம்:
திரைப்படம்: Ace
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்கள்: கபில் கபிலன் மற்றும் ஸ்ரேயா கோஷல்
பாடலாசியர்: தாமரை.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…