‘தொட்டு தொட்டு பேசும்’ பாடல் வரிகள் | Thottu Thottu Pesum Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
ஆண்: தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
பெண்: அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே…
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே… சுல்தானே… சுல்தானே
சுல்தானே… ஆஅ… ஆஅ…ஆ…
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
ஆண்: இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே…
பெண்: என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே…
ஆண்: டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே…
பெண்: பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே…
ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்…
அங்கம் பார்த்தேனே…
பெண்: அங்கே சொர்க்கம் இல்லை இல்லை
இங்கே பார்த்தேனே
சுல்தானே… சுல்தானே… சுல்தானே
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
ஆண்: கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்…
பெண்: புத்தகத்தில் இருக்கும்
உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்…
ஆண்: புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா…
பெண்: முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா…
ஆண்: ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா…
பெண்: ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
சுல்தானே… ஆஅ… ஆஅ… ஆ…
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
பெண்: அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது…
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே…
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே… சுல்தானே… சுல்தானே
சுல்தானே….
பாடல் விவரம்:
திரைப்படம்: எதிரும் புதிரும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுவர்ணலதா & புஷ்பவனம் குப்புசாமி
பாடலாசியர்: வைரமுத்து.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…