தெலுங்கு நடிகர் சுனிஷித் என்பவர் தனக்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், மூன்று முறை கருகலைப்பு நடந்ததாகவும், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
இது தெலுங்கு சினிமாவில் பரப்பரப்பை ஏற்படுத்த, இதோடு மட்டும் விடாமல் தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
லாவண்யா திரிபாதி தமிழில் சசிக்குமார் நடித்த பிரம்மன் படம் மூலம் அறிமுகமாகி பிறகு மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...