‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் வரிகள்| Soul Of Varisu Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
பெண்: பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா…
பெண்: என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே…
குழு (பெண்கள்): இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா…
குழு (பெண்கள்): என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா…
குழு (பெண்கள்): பால் முகம் கானவே நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன் ஆரோ
கால் தடம் வீழவே நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே தாலோ….
பாடல் விவரம்:
திரைப்படம்: வாரிசு
இசை: தமன் S
பாடியவர்கள்: சித்ரா
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…