13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, பேட்டிங் இறங்கிய பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது. 202 என்கிற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா, குவான்டன் டி காக், சூர்யகுமார் மூவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர், ஆனால் அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அதேபோல் ஐந்தாவதாக களமிறங்கிய பொல்லார்ட் தனது விஸ்வரூபத்தை காட்டினார். இறுதியாக 20 ஓவரில் 201 ரன்கள் எடுக்க, போட்டி டிராவாக மாறியது. இதனால் அடுத்து சூப்பர் ஓவரை நோக்கி இப்போட்டி நகர்ந்தது.


சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, சூப்பர் ஓவரில் வெற்றியை தனதாக்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு.
⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...