‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அரசியல் வருகையை பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் கண்டிப்பாக நிறைவேறும் என நம்பிக்கையாக எதிர்ப்பார்த்து காத்திருக்க, அவர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல” என்ற அறிவிப்புடன், “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அதிசியம்… அற்புதம்… நிகழும்…” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...