‘ரயிலின் ஒலிகள்’ பாடல் வரிகள்| Railin Oligal Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
ஆண்: உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
ஆண்: உன் ஊர் தாண்டிடும்
ரயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே…
ஆண்: என் தாயோடும் கூறாத
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்… காந்துறேன்…
பெண்: கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்…
ஆண் & பெண்: தேக்குறேன்…
பெண்: மண்மேலோடும் மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன்.. தூருறேன்…
ஆண்: பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ
நீ வாக்குற… காக்குற…
ஆண்: கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ உன் வாசம்…
ஆண்: பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே…
பெண்: அன்பே… அன்பே… அன்பே… அன்பே…
பெண்: அன்பே… அன்பே… அன்பே… அன்பே…
பெண்: அன்பே… அன்பே… அன்பே… அன்பே…
பாடல் விவரம்:
திரைப்படம்: ப்ளு ஸ்டார்
இசை: கோவிந்த் வசந்தா
பாடியவர்கள்: பிரதீப் குமார் & சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசியர்: உமா தேவி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…