பல்வேறு கொடூரங்களுக்கு இதுஒரு எடுத்துக்காட்டு – மணிப்பூர் கொடுமை குறித்து பிரியா பவானி ஷங்கர்
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது ஆதங்கத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அவர் கூறியுள்ளதாவது, “மணிப்பூர் பெண்கள் – இந்த சமூகம், இனம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து உள்ளன. மனிதர்களாகிய நாம் இந்த செயலை நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இத்தகைய பல்வேறு கொடூரங்களுக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. பிரச்சனையில் உள்ள மக்களுக்கு ஊடகங்களை முடக்குவது உதவாது” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண