‘ஒத்த ரூவா தாரேன்’ பாடல் வரிகள் | Otha Ruba Tharen Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்…
பெண்: ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்…
ஆண்: ஏய்… பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்…
பெண்: ஏய்… பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா…
ஆண்: நா மச்சு வீடும் தாரேன்
பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி
மாந்தோப்புக்கு போவோம்…
பெண்: அட மச்சு வீடும் வேணாம்
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
மல்லுக்கு நிக்கிற மாமா
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்…
ஆண்: ஹே… நஞ்சை புஞ்சசையும் தாரேன்
நாலு தோட்டம் எழுதி தாரேன்
தண்ணிக்கு போறது போல
கண்ணே கொளத்து பக்கம் வாடி…
பெண்: உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்
நாலு தோட்டம் தொறவும் வேணாம்
கணக்கு பண்ணுற மாமா
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…
ஆண்: ஏய்… சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி…
பெண்: ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்….
பாடல் விவரம்:
திரைப்படம்: நாட்டுப்புறப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & தேவி நீத்தியார்
பாடலாசியர்: கஸ்தூரி ராஜா.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…