‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வரிகள் | Nenjame Nenjame Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
ஆண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
ஆண்: ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே…
ஆண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
பெண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
பெண்: ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே…
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
பெண்: கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற
வெக்கம் அங்கும் இங்கும்
ரெக்கை கட்டுதே…
பெண்: உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே.. ஓஓ…
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
ஆண்: இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே…
ஆண் : ம்ம்… துள்ளும் பாட்டிலே…
எழும் விசை…
என்னை மீட்டுதே… ஓஓஓஓ…
ஆண்: நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததாள்
திக்கெல்லாம் வெள்ளி மீனே…
ஆண்: நீ தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லை தேனே…
பெண்: ஓ ஓ.. செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திக்கும் முத்தமே
கொஞ்சம் தாயே…
பெண்: ஓ ஓ.. செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திபூ காட்டுக்கே கூட்டிப்போயேன்
காட்டுக்கே கூட்டிப்போயேன்…
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ…
பெண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…
பெண்: ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே…
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே.. ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே.. ஆராரீரோ….
பாடல் விவரம்:
திரைப்படம்: மாமன்னன்
இசை: A. R. ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசியர்: யுகபாரதி .
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…