தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா.


இப்படத்தையடுத்து ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் படங்களை போல் தெலுங்கு, கன்னடம் மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்களோ, கதாப்பாத்திரமும் அமையவில்லை. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது தனது ஹாட் படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் ரசிகர்களிடம் உரையாடும் பொது உங்களுக்கு பிடித்த தெலுங்கு நடிகர் யார்? என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு மகேஷ் பாபு என கூறியுள்ளார். இதனை கண்டு காண்டான ஜூனியர் NTR ரசிகர்கள், மீரா சோப்ராவை திட்டி தீர்த்துள்ளனர். சகட்டு மேனிக்கு திட்டியது மட்டுமில்லாமல் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். பாலியல் ரீதியாகவும் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியான நிலா ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்து ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.
Twitter Feed:
@NCWIndia @sharmarekha @hydcitypolice @Twitter plz take action against these account holder’s. They r openly #slutshamming threatning of #gangrape, #acidattack , #murder. This cannot go unnoticed. pic.twitter.com/PeEs0Sm4J2
— meera chopra (@MeerraChopra) June 3, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...