‘கல்லூரும்’ பாடல் வரிகள் | Kalloorum Song Lyrics in Tamil – Veera Dheera Sooran

Kalloorum Song Lyrics in Tamil
Kalloorum Song Lyrics in Tamil

‘கல்லூரும்’ பாடல் வரிகள் | Kalloorum Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா…

ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட…

பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட…

ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம…

ஆண்: ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு
பல முத்தத்த பார்த்தாச்சு
அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா
என் உள்ளாற தீ பிடிக்கும்…

பெண்: ஏ பொல்லாத கண்ணாச்சு
ஆண் : ஹே ஹே ஹே…
பெண்: அதில் என் தேகம் புண்ணாச்சு
ஆண் : ஓ ஓ ஓ…

பெண்: அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா
உன் கண்ணு என்ன தோக்கடிக்கும்…

ஆண்: உன் வாசம் தான் வேணும்
உன் நெஞ்சுல நானும்
உன் கூடவே நிழலா வர தோனும்…

பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா…

ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட…

பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட…

ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம….

பாடல் விவரம்:

திரைப்படம்: வீர தீர சூரன்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: ஹரிசரண் மற்றும் ஸ்வேத்தா மோகன்

பாடலாசியர்: விவேக்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…