‘காட்டுமல்லி’ பாடல் வரிகள்| Kaattumalli Song Lyrics in Tamil – Viduthalai Part – 1

Kaattumalli Song Lyrics in Tamil
Kaattumalli Song Lyrics in Tamil

‘காட்டுமல்லி’ பாடல் வரிகள்| Kaattumalli Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல…

ஆண்: வழி நெடுக காட்டுமல்லி…

பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது…

பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…

ஆண்: கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல…

பெண்: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…

ஆண்: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே…

பெண்: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

ஆண்: காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க…

பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை…

ஆண்: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல…

பெண்: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல…

ஆண்: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்னவிட்டு போவதில்ல…

பெண்: ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

ஆண்: இறு சிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது…

பெண்: சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை…

ஆண்: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள…

பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

ஆண் & பெண்: வழி நெடுக காட்டுமல்லி….

பாடல் விவரம்:

திரைப்படம்: விடுதலை – 1

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா & அனன்யா பட்

பாடலாசியர்: இளையராஜா.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…