உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், கடந்த செப்டம்பர் 14 -ஆம் தேதி நான்கு இரக்கமற்ற ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 19- வயது இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


இந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சியாக அமைந்தது, பல்வேறு தரப்பினர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உயிரிழிந்த அந்த அப்பாவி பெண்ணுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்து வருகின்றனர். நேற்றிரவு அப்பெண்ணின் உடலை, அவர் குடும்பத்தினர் வருவதற்கு முன்பே உத்தரபிரதேச காவல்துறையினர் எடுத்து சென்று தகனம் செய்துள்ளனர். இதுக்குறித்து இறந்த பெண்ணின் சகோதரர் கூறுகையில், “இறந்த என் சகோதரியின் உடலை காவல்துறையினர் வலுகட்டாயமாக எடுத்து சென்று தகனம் செய்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தையை, தகனத்திற்காக உடனடியாக அழைத்து செல்லப்பட்டார்” என வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது, இதனால் அந்த பகுதி போராட்ட களமாக மாறியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...