சனாதன எதிர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

0
Case registered against Udhayanidhi Stalin
Case registered against Udhayanidhi Stalin

 

சனாதன எதிர்ப்பு: உதயநிதி மீது வழக்கு பதிவு

சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண