‘தங்கலான்’ குறித்து மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்: விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒத்திகையின்போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் குணமடைந்ததும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.


இந்நிலையில் இப்படம் குறித்து மாளவிகா மோகனன் கூறியதாவது, “தங்கலான், தனித்துவமான உலகை உருவாக்குகிறோம். வாரியர் கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதால், இப்படத்திற்காக எனது உடல் எடையை குறைத்துள்ளேன், மேலும் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். இப்படம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு கடினமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் விக்ரம் எனக்கு உதவியாக இருந்தார். க நடிகர்களை ஊக்கப்படுத்தும் அவரது குணம் மிகவும் பிடித்துள்ளது” என கூறியுள்ளார்.
‘இந்தியன் 2‘ படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்!
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…