‘நீ சிங்கம்தான்’ பாடல் வரிகள் | Nee Singam Dhan Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்
உன் பேரை சாய்க்க பலியனைகள்
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…
ஆண்: தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…
ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…
ஆண்: ஏ… பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும் என்ன சொல்
மழைக்காற்று மான்குட்டிபோலே
சுயமின்றி வாழ்வான் மண்மேலே…
ஆண்: உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்…
ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…
ஆண்: உறவோ யார் என நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்…
ஆண்: அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை…
ஆண்: புகழ் வந்தாலும் அது கூட கடன்தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்…
ஆண்: தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த தீ போலத்தான்….
பாடல் விவரம்:
திரைப்படம்: பத்து தல
இசை: A. R. ரஹ்மான்
பாடியவர்கள்: சித் ஶ்ரீராம்
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…